யாரிவன்


வணக்கம்,
வைகைக் கரையில் பிறந்தவன்;
கொளவாய் ஏரிக்கரையில் கிடப்பவன்;
தமிழருவியில் குதித்துப் பழகும் சிறுவன்;
இந்திய மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவன்;
திரைகடலோடி உங்கள் நட்புக்களைத் தேட,
வலைக்கடலில் வலைவிரித்து நீந்துகிறேன்.

மதுரைக்கு வந்தீங்கன்னா ஒரு ரயில் வண்டியை அனுப்பிவையுங்கள்
செங்கல்பட்டுக்கு வந்தீங்கன்னா ஒரு தகவலை மட்டும் அனுப்பிவையுங்கள்.
சந்திக்கலாம்!

மின்னஞ்சல் முகவரி:neechalkaran@gmail.com

எழுத்து:
2010 முதல் இணைய இதழ்களுக்கும் அச்சு இதழ்களுக்கும் எழுதிவருகிறார். பன்னாட்டு மாத இதழான வலைத்தமிழின் ஆசிரியர் குழு உறுப்பினர். விக்கித்திட்டங்களில் தன்னார்வலராக எழுதி வருகிறார். கற்பனை சார்ந்து கவி'த்தவையும், கடித்தவையும் எழுதும் வலைப்பதிவு: மணல்வீடு, கணினி சார்ந்து கற்றவற்றையும் பெற்றவற்றையும் குறித்து எழுதும் வலைப்பதிவு: எதிர்நீச்சல். சமூகம் சார்ந்த கருத்துகளும், எண்ணங்களும் பற்றிய வலைப்பதிவு: முத்துக்குளியல்
இணைய இதழ்கள்: நியூஸ்18, திண்ணை, வல்லமை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்து கமலம்
அச்சு:தமிழ் கம்ப்யூட்டர், விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், அருவி காலண்டிதழ்
வெளிவந்த நூல்: மானிட்டர் உலகம்

நுட்பவியல்:
வாணி தமிழ்ப் பிழை திருத்தி
பட்டியல்- அனைத்து முயற்சிகளும்
கிட்ஹப் பங்களிப்புகள்
கேகிள் பங்களிப்புகள்

பயிற்றுநர்:
பல கல்லூரிகளில் கணித்தமிழ், இயற்கை மொழிப்பகுப்பாய்வு, நிரலாக்கம், விக்கிப்பீடியா போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளித்துவருகிறார். சில யூட்யூப் ஒளிப்பதிவுகள்



விருதுகள்: